தாயகம்

யாழில் பெரும் சோகம்! வீதியில் பரிதாபமாய் பறிபோன உயிர்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (01-03-2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 80 வயதான சின்னத்தம்பி அருமைநாயகம் என்பவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை குறித்த முதியவர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியை கடக்க முற்பட்டபோது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் முதியவரை மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Back to top button