பிரான்ஸில் நிறுத்தப்பட்ட ஜனாதிபதியின் முக்கிய சந்திப்பு!
#france#
விவசாயக்கண்காட்சி (Salon de l’agriculture) இடம்பெற்று, மூன்றாவது வாரத்தில் அவர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது. விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
வீதிகளை முடக்கி, போக்குவரத்தை தடுத்து பெரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், விவசாயிகளை ஜனாதிபதி சந்திப்பார் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மார்ச் 17 ஆம் திகதி எலிசே மாளிக்கை வெளியிட்ட தகவலின் படி, இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளமைக்கு விவசாயிகள் சம்மேளனம் கண்டனம் வெளியிட்டுள்ளது. விரைவில் மீண்டும் நாடு முடக்க போராட்டம் இடம்பெறும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.