பிரான்ஸ்
பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த காவல்துறை அதிகாரி!
மீட்பு பணி ஒன்றுக்குச் சென்ற Bruno D. எனும் காவல்துறை வீரர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
மார்ச் 20 ஆம் திகதி புதன்கிழமை காலை பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் மீட்பு பணி ஒன்றுக்காகச் சென்றிருந்தார். படிக்கட்டின் ஏறும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
படிக்கட்டில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு விழ, SAMU மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அவரை 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அது பலனின்றி நேற்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் உடன் பயணித்த காவல்துறை வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.