பிரான்ஸ்
பிரான்ஸ் பல்பொருள் அங்காடி முன் பதற்றம்! ஒருவர் வெட்டி கொலை!
#france#
பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்பாக நேற்று சனிக்கிழமை மாலை வாள் வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள Onet-le-Château (Aveyron) நகரில் இச்சம்பவம் மார்ச் 16, நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அங்குள்ள Super U அங்காடியில் இருந்து குறித்த 45 வயதுடைய நபர் வெளியேறிய போது, வெளியே காத்திருந்த ஆயுததாரி ஒருவர், வாள் போன்ற கூரிய ஆயுதத்தினால் அவரை தாக்கியுள்ளார். பல தடவைகள் வெட்டப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
அவருடைய மனைவி சம்பவத்தின் போது அருகில் இருந்துள்ளார். அவர் தாக்கப்படவில்லை. மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.