இத்தாலிக்கு படகு மூலம் சென்ற அகதிகள்! பதபதைக்கும் திக் திக் நிமிடங்கள்!
லிபியாவிலிருந்து இத்தாலி அல்லது மோல்டாவிற்கு மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் ஏற்றிச் சென்ற கப்பலில் பயணித்த 60 பேர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து இத்தாலிய கடலோரக் காவல்படையின் ஒருங்கிணைப்பில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இதன்போது 25 பேரை “மிகவும் பலவீனமான” நிலையில் மீட்டதாகவும், மயக்கமடைந்த இருவர் உலங்கு வானூர்திகள் மூலம் சிசிலிக்கு அனுப்பப்பட்டதாகவும் மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடல் உலகின் மிக ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மாத்திரம் இந்த கடலைக் கடக்க முயன்ற கிட்டத்தட்ட 2500 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று விபத்துக்குள்ளான படகு 7 நாட்களுக்கு முன்னர் லிபியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்தது.
இதன்பபோது தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் குறைந்தது ஒரு குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 60 பேர் வழியில் இறந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்றும் இன்றும் குறித்த படகில் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 200 பேரையும் மீட்டதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்