தாயகம்

தென்னிலங்கை பெண்னிடம் ஏமாந்த யாழ் இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாண இளைஞன் ஒருவரை கனடா அனுப்புவதாக கூறி, 60 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தென்னிலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 60 இலட்சம் பணத்தை பறிகொடுத்த இளைஞர்
குறித்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கனடா அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.


பணம் கொடுத்தும் இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இது தொடர்பில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் . அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன் போது தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் பணத்தினை இளைஞனிடம் மீள அளித்துள்ளார் .


அதனையடுத்து பெண்ணை 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அதேவேளை வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண மக்கள் பெரும் தொகை பணத்தை இழந்து வருவதாக அணமையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button