பிரான்ஸ்

தாக்குதல் திட்டம்! பிரான்ஸில் மூவர் அதிரடி கைது!

பெல்ஜிய தலைநகர் Brussels இல் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த மூவரை Direction générale de la sécurité intérieure படையினர் கைது செய்துள்ளனர். பெல்ஜியத்தில் இடம்பெற உள்ள கலை நிகழ்ச்சி ஒன்றின் போது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த தாக்குதலை அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

அந்த தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த மூவர் கொண்ட குழு கடந்தவாரத்தில் பிரான்சின் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 15 வயதுடையவர்கள் எனவும், ஒருவர் 17 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பெல்ஜிய சர்வதேச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.

Back to top button