பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! இனி வரி அறவிடப்படும்!
பிரான்சில் மருத்துவரைச் சந்திக்க நேரம் எடுத்து விட்டு, எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி சமூகமளிக்க தவறும் நோயாளர்களுக்கு மருத்துவ சத்திப்பை கனம் பண்ணாவிட்டால் “taxe lapin” எனும் வரி வசூலிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது என சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக்கான அமைச்சர் Catherine Vautrin தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அண்மையில் நடத்தப்பட்ட விசேட கருத்துக்கணிப்பில் பிரான்சில் மருத்துவரைச் சந்திக்க நேரம் எடுத்து விட்டு, (rendez-vous) எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி சமூகமளிக்க தவறும் நோயாளர்கள் ஆண்டொன்றுக்கு 6% முதல் 10% வரை அதாவது 27 மில்லியன் சந்திப்புகள் வீணாக்கப் படுகிறது என தெரியவந்துள்ளது.
கூடுதலாக பல் மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், மருத்துவர்கள் மட்டுமன்றி இன்னுமொரு நோயாளருக்கும் மருத்துவரை சந்திக்கும் நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே மக்களின் குறித்த அசமந்தப் போக்கான செயலை இல்லாதொழிக்க அவர்களுக்கு “taxe lapin” என்னும் வரியை விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்த அரசு ஆராய்ந்து வருகின்றது.