ஜோதிடம்

மீனா ராசியில் செவ்வாய் பெயர்ச்சி..மூன்று ராசிக்கு ஆரம்பமாகிய பொற்காலம்! இனி மழை தான்!!

ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் செவ்வாய் கிரகம் சஞ்சரிக்க உள்ள நிலையில், அதிர்ஷ்டங்களை சந்திக்கும் ராசியினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில் கிரக பயிற்சிகள் நிகழும் போது சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. ஆனால் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றது.

கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகமானது ஏப்ரல் மாதம் 23ம் தேதி மீன ராசியில் பிரவேசிக்கும் நிலையில், ராகு ஏற்கனவே மீனத்தில் உள்ளதால், செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை ஏற்படுகின்றது. இதனால் மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகள் பலனடைவதுடன், குறித்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பமாகின்றது என்றே கூறலாம்.

மிதுன ராசி
மிதுன ராசியினரைப் பொறுத்த வரையில், குறித்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றது. பதவி உயர்வு, அலுவலகத்தில் புதிய பொறுப்பு, தேர்வில் வெற்றி என அடுத்தடுத்து சாதிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவதுடன், நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். மறுதி தொடர்பான பிரச்சினை நீங்குவதுடன், மற பிரச்சினை நீங்குமாம். முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தையும் பெறலாம்.

கடக ராசி
மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுவதால், கடக ராசியினருக்கு சாதகமாக அமைகின்றது. வியாபார பணியில் நல்ல லாபம் கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட நாட்கள் தடைபட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவதுடன், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளதுடன், ஆன்மீகத்தில் நாட்டமும் அதிகரிக்கின்றது. பணவரவும் அதிகரிக்கின்றது.

விருச்சிக ராசி
குறித்த செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் ஏற்றத்தினை காணலாம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுவதுடன், பணவரவும் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பும், தம்பதிகளிடையே புரிதல் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், ஆன்மீக பணியில் ஈடுபாடும், பொருளாதார உயர்வும் ஏற்படுகின்றது.

Back to top button