பாடசாலை மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம்! ஆசிரியர் விளக்கமறியலில்!
அநுராதபுரம் பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற அனுராதபுரம் பிரதம நீதியரசர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை குறித்த மாணவியை அப்பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், விடுதியின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்றார். குறித்த மாணவியின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.