பிரான்ஸ்

பிரான்ஸ் தேவாலயத்தில் பதற்றம்! மர்ம பொதி!

கைவிடப்பட்ட அல்லது மறந்து விட்டுச் செல்லப்பட்ட பொதிகள் மீதான பயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று மார்ச் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை தேவாலயம் ஒன்றில் அதுபோன்ற மர்மப்பொதி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Gap (Hautes-Alpes) நகர தேவாலயம் (cathédrale de Gap) இன்று காலை வெளியேற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் தேவாலயம் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

தேவாலயத்தில் மர்மப் பொதி இருந்ததாகவும், அதையடுத்து அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதாகவும், மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொதியை விட்டுச் சென்றவர் யார் என்பது தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருகிறது. அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button