பிரான்ஸ் பள்ளிவாசல் முன் பாரிய குழு மோதல்!
#france#
Val-d’Oise மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. Goussainville (Val-d’Oise) நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்பாக கூடிய 30 வரையான இளைஞர்கள் குழு மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கிக்கொண்டனர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
கத்தி, Baseball மட்டை உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவத்தில் மூவர் கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் Gonesse மற்றும் Pitié-Salpêtrière மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்புகை வீசி அவர்களை கலைந்துபோகச் செய்தனர். காயமடைந்தவர்கள் 22, 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.