தாயகம்

யாழில் கொழும்பு பெண்களின் அதிர்ச்சி செயல்!

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில், கொழும்பை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (23) காலை இடம்பெற்ற போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர். கொழும்பு கொச்சிக்கடை பெண்கள்
இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலிக்கொடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளனர்.

Back to top button