தாயகம்

யாழில் பரபரப்பு! பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

#france#

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று (22) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது. வெள்ளிக்கிழமை தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கி உள்ளது.

பதறியடித்த பெற்றோர் உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்ற போது சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Back to top button