தாயகம்

இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த அவலம்!

இத்தாலி நாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் திடீரென வீசிய காற்றினால் முறிந்து விழுந்த தென்னை மரத்தின் அடியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.


இதன்போது,உயிரிழந்தவர் சிலாபம் முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button